அரியலூர், மே:30
அரியலூர் மாவட்ட மைய நூலகமும், தனியார் ஐ.ஏ.எஸ். அகடாமியும் இணைந்து நடத்திய இந்த மாதிரி தேர்வுக்கு அரியலூர் மாவட்ட மைய நூலக அலுவலர் ஆண்டாள் தலைமை தாங்கினார். இந்த மாதிரி தேர்வில் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 150 போட்டி தேர்வாளர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு முடிந்தவுடன் அனைத்து விடைத்தாள்களும் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் முதல் 12 இடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் எவ்வாறு போட்டித்தேர்வை எதிர்கொள்வது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதில், நூலக அலுவலர்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



