நாகர்கோவில், நவம்பர் 10 –
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து கல்லூரியில் படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரி வழியாக செல்லும் பஸ்ஸில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் சக தோழிகளும் இருந்தனர்.
பஸ் மாநகராட்சி அலுவலகம் அருகில் செல்லும்போது திடீரென மாணவி வலிப்பு வந்து கீழே விழுந்தார். இதை பார்த்ததும் டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார். பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விரைந்து வந்து முதலுதவி அளித்தனர். பின்னர் மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



