சென்னை, மார்ச் 19 –
ஓ பி சி மக்கள் உரிமை கட்சியின் செய்தியாளர்கள் சந்திப்பு அதன் தலைவர் இரத்தின சபாபதி தலைமையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
இதில் ஓபிசி மக்கள் கட்சியின் தலைவர் இரத்தினசபாபதி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: தேசிய கட்களும் மாநில கட்சிகளும் 70 சதவீத்திற்கும் அதிகமாக உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரின் உழைப்பை உறிஞ்சி கொண்டு துரேகங்களை இழைத்து வருகின்றது.
ஆனால் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் இப்பட்டியலில் உள்ள மக்களின் மக்கள் எந்தவித வேலை வாய்ப்பையும் முன்னேற்றத்தையும் அடையவில்லை. ஆகவே தான் ஓபிசி மக்கள் உரிமை கட்சி கீழ்க்கண்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அரசியல் களத்துக்கு வருகிறது.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தரமான கல்வி, கல்வி உதவித்தொகை, வட்டியில்லா கல்வி கடன், நிரந்தர வேலை வாய்ப்புகள், விவசாயம், சிறு தொழில் செய்வதற்கு அரசு உதவிகள், மானியங்கள் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை, ஊழல் இல்லாத கடமை உணர்வுடன் கூடிய மக்கள் பிரதிநிதிகள், அரசு பணியாளர்களை உருவாக்குதல், குறிப்பாக ஒப்பந்த தொழிலாளர்கள் திட்டத்தை ஒழிப்பது, இதன் மூலம் இடஒதுக்கீட்டின் இருப்பை உறுதி செய்வது என்ற கொள்கையுடன் எங்கள் பரப்புரையுடன் ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்தித்து மக்களிடம் மாற்றத்தை உருவாக்குவோம். தேசிய, மாநில அளவில் ஆண்ட, கட்சிகளுக்கு மாற்றாக செயல்படுவோம் என்று அவர் தெரிவித்தார்.



