கோவை, ஏப். 18 –
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொள்ளாச்சி திமுக கூட்டணி வேட்பாளர் நித்தியானந்தன் ஆச்சிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆ.சங்கம்பாளையம் மஸ்ஜிதே நூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நிகழ்வில் பள்ளியின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொள்ளாச்சி 26 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் எம்.கே சாந்தலிங்கம் மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



