குளச்சல், செப். 13 –
குளச்சல் போரில் டச்சுப்படைகளை வென்ற போராளியும் 108 களரி வித்தகரும் ஆசானுமான அனந்தபத்மநாபன் 275 வது நினைவு தினத்தில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்விற்கு சீலன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆன்சி சோபா ராணி, மண்டல செயலாளர் ஆன்றலின் சுஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தக்கலை மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினராஜ், வழக்கறிஞர் பாசறை செயலாளர் பெனின், திருவட்டார் தெற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், தொழிலாளர் பாசறை செயலாளர் ரஞ்சித், தமிழ் மிட்சி பாசறை செயலாளர் ஜாண்பிரைட், மாணவர் பாசறை செயலாளர் பபின், குளச்சல் தொகுதி பொறுப்பாளர்கள் அனந்தீஸ்வரன், வில்லுக்குறி சேகர் மற்றும் ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



