நாகர்கோவில் ஆக 11
குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான என். தளவாய் சுந்தரம் அறிவுறுத்தலின்படி அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் ஆர். கமலக்கண்ணன் ஆணைக்கிணங்க அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் இரணியல் நீதிமன்ற சந்திப்பு கிளை கூட்டம் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வைகுண்ட மணி தலைமையில் தக்கலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் ராஜகுமார் இரணியில் பேரூர் கழக செயலாளர் பரமேஷ் தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர்கள் சுரேஷ்குமார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆட்டோ பிரிவு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்டோ சீனியாரிட்டி அடிப்படையில் சவாரி எடுப்பது மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் தனிநபர் காப்பீடு சங்கம் மூலம் கட்டுவது எனவும், அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்கம் மூலம் 5,000 ரூபாய் லோன் வழங்குவது எனவும், சங்க வளர்ச்சிக்காக மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக ஆட்டோ பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் எம் நடேசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



