நாகர்கோவில், ஆக. 30 –
குமரி மாவட்ட விவசாயிகள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருவது வழக்கம். கடந்த கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்காதால் விவசாயிகள் கலெக்டர் அலுவலக கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர். மேலும் கலெக்டர் பங்கேற்காத காரணத்தால் விவசாயிகளின் பொதுவான நீண்ட கால பிரச்சனைகளை விவாதம் நடத்த முடியவில்லை என புகார் எழுந்தது. இதனால் செப்டம்பர் 5-ம் தேதிக்கு முன்பு சிறப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டப்பட வேண்டும் என்று விவசாய பிரதிநிதிகள் சார்பில் மாநில விவசாய துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இன்று நாகர்கோவில் நீர்வளத்துறை அலுவலகத்தில் சிறப்பு கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கோதையாறு பாசன திட்ட குழு, நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டம் கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜெங்கின் பிரபாகர் தலைமையில் இன்று நடந்தது. பாசன துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் பிரச்சனை விவாதிக்கப்பட்டது.



