திருப்புவனம்:ஏப்:13
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் உள்ள கொந்தகை கிராமத்தில் கிராமப்புற அனுபவப் பணித் திட்டத்தின் கீழ் தென்னை விவசாயிகளுடன் செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் கி.சு.சுமிதா மற்றும் ம.சுவேதா கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டினால் ஏற்படும் அறிகுறிகளை அறிந்து அதற்கு வாலி பொறி அமைக்க செயல்முறை விளக்கம் அளித்தார். அப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்று சந்தேகத்தை கேட்டறிந்து பயன்பெற்றனர்.



