தருமபுரி, அக்டோபர் 06 –
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தென்னிந்திய அளவில் மாபெரும் 2 நாள் கபாடி போட்டி பாஜக சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு பாஜக நகர தலைவர் ஆர். கணேசன் தலைமை வகித்தார்.
மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே. சிவா, ஒன்றிய தலைவர் நோன்பரசு, முன்னாள் மாவட்ட மீனவர் அணி தலைவர் பி.ஆர். மாதையன், முன்னாள் கிழக்கு ஒன்றிய தலைவர் பசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர், முன்னாள் எம்.எல். ஏ பாஸ்கர், மற்றும் முன்னாள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கபாடி போட்டியினை துவக்கி வைத்தனர்.
இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த கபாடி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் காவேரி வர்மன், முரளி, தெய்வமணி, சின்னவன், ஸ்ரீதேவி, சிவலிங்கம், ஆறுமுகம், மண்டல பொறுப்பாளர்கள் தண்டபாணி, ராஜாராம், முனியப்பன், பெரியண்ணன், சிவநாதன், ராமர், பாஜக நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



