தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டியிருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் மற்றும் இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றிலும், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.



