தென்தாமரைகுளம்., ஜன. 27. அஞ்சுகிராமத்தை அடுத்த நெல்லை மாவட்டம், லெவஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் கேப் பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழாவானது கல்லூரியின் நிறுவனர் கிருஷ்ணபிள்ளை வழிகாட்டலின் படி, இணை நிறுவனர் டாக்டர். கே. வி. அய்யப்ப கார்த்திக் தலைமையில், கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெ. பி ரெனின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக ரம்யா பிரதீப் கலந்துகொண்டார். என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்புடன், தேசிய கீதம் ஒலிக்க, கல்லூரியின் இணை நிறுவனர் அய்யப்ப கார்த்திக் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரெனின் மற்றும் சிறப்பு விருந்தினர் ரம்யா பிரதீப் ஆகியோர் இணைந்து தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினர். நாட்டு விடுதலைக்காக போராடிய தியாகிகளின் தியாகங்களை நினைவு கூறும் வண்ணமாக பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லூரியின் விழா ஒருங்கிணைப்பாளர் டாக்டர். அருண் பிரசாத் மற்றும் ஆசிரியர்கள் விழாவினை ஒருங்கிணைத்தனர்.



