கன்னியாகுமரி, மார். 12 –
அஞ்சுகிராமத்தை அடுத்த கனகப்பப்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (45). டெம்போ டிரைவர். இவர் அதே ஊரை சேர்ந்த மதியழகன் (47) என்பவருக்கு ரூ.9 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். தொடர்ந்து பிரபாகரன் பணத்தை கேட்டுள்ளார். ஆனால் மதியழகன் பணத்தை கொடுக்க மறுத்து வந்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை கனகப்பபுரம் பகுதியில் வைத்து அவர்களுக்கு இடையே மீண்டும் பண பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரபாகரன் அந்த பகுதியில் உள்ள சுடலை சாமி கோவிலில் பக்கம் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மதியழகன் பிரபாகரனை தடுத்து நிறுத்தி, தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் வெட்டியுள்ளார்.
பலத்த காயம் அடைந்த பிரபாகரன் கீழே கீழ விழுந்தார். அந்த நேரம் அந்த வழியாக வந்த பிரபாகரன் மனைவி மீனா என்பவர் சம்பவத்தை கண்டுள்ளார். அவரையும் மதியழகன் சரமாரியாக தாக்கிவிட்டு கொலை மிரட்டல் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
தொடர்ந்து காயம் அடைந்த பிரபாகரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீனா அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மதியழகனை தேடிவந்தனர்.
இதற்கு இடையே பிரபாகரன் உடல்நிலை மோசமடைந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு ஐக்கிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிட்சை பலனின்றி இன்று பிரபாகரன் உயிரிழந்தார். இதை அடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மதியழகனை இன்று கைது செய்தனர்.


