தருமபுரி, டிசம்பர் 02 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா சிட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை ஆகியவை வேண்டியும், மாற்று திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் வேண்டியும் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான INSPIRE MANAK AWARD புத்தகா அறிவியல் ஆய்வு விருது மாநில அளவிலான அறிவில் கண்காட்சி நடைபெற்றதில் தருமபுரி மாவட்ட ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் விக்னேஷ் ” Lagoperated. Mo use” என்ற தலைப்பில் மாநில அளவில் தேர்ச்சி பெற்று பெற்ற விருதினை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊராக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ் , மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரசேகரன், முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



