மார்த்தாண்டம், செப். 11 –
மார்த்தாண்டம் அருகே சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்ட வயோதிகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாகோடு நெடுவிளை சேர்ந்த வின்சென்ட் (64) ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்து விஷம் குடித்து நிலையில் காணப்பட்டார்.
உடனே குழித்துறை அரசு ஆஸ்பத்திரி கொண்டுவரப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். இது குறித்து இவரது மனைவி மேரி ஸ்டெல்லா கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


