ஈரோடு மே 25 தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஈரோடு மாவட்ட கிளை சார்பாக மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது அவதார நாளை யொட்டி சதய விழாவை யொட்டி ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. தலைவர் ராஜா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் செயலாளர் செல்வநாயகம் வரவேற்றார். பொருளாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார் .
நிகழ்ச்சியில் 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற முத்தரையர் இன மாணவ மாணவிகளுகள் 40 பேர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது .
நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



