விளாத்திகுளம், செப்டம்பர் 27 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிவஞானபுரம் கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஊராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மின்சாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 17 துறைகள் மூலம் இம்முகாமில் பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.
இம்முகாமில் சிவஞானபுரம், நமச்சிவாயபுரம் சக்கம்மாள்புரம், பொம்மையாபுரம், இனம் சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெற்றனர். அவ்வாறு பொது மக்கள் அளித்த மனுக்களில் தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வளிக்கும் வகையில் மின்வாரிய அட்டை, கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகம் உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்பட்டது. நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா, அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



