களியக்காவிளை, செப். 10 –
களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் அனீஸ் குமார் (34). கொத்தனார். இவருக்கும் அதே பகுதி சேர்ந்த மஹி (23), சியாம் (25), உண்ணி (21), குஞ்சன் (31) ஆகியோருக்கும் இடையே ஓணம் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று அனீஸ் குமார் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த நான்கு பேரும் அவரை தாக்கினர். காயமடைந்த அனீஸ் குமார் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். களியக்காவிளை போலீசார் மஹி, சியாம், உண்ணி, குஞ்சன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


