By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மோதிர மலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மோதிர மலை
கனஂனியாகுமரிமாவட்டம்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மோதிர மலை

Last updated: August 22, 2024 2:01 pm
August 22, 2024
78 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 22 

 

குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது ஒரு சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கன மழை இடைவிடாது இரவும் முழுவதும்  கொட்டியதால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாலமோரில் அதிகபட்சமாக 70.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கோழிப்போர் விளை, குழித்துறை, ஆணைக்கிடங்கு, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மலையோர பகுதிகளில் கொட்டிய மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

 

கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மோதிரமலை-குற்றியாறு தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. ஏற்கனவே அந்த பகுதியில் பழைய பாலத்தை மாற்றிவிட்டு புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த தற்காலிக பாலத்தை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றது.

 

தற்காலிக பாலத்தை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றதால் குற்றியாருக்கு சென்ற பஸ் திரும்பி வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. கிழவி ஆறு, தச்சைமலை உள்பட 12 மலையோர கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பள்ளி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

 

தற்காலிக பாலத்தை சீரமைத்தால் மட்டுமே கிராம மக்கள் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குற்றியாறில் நிறுத்தப்பட்டுள்ள பஸ் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் இன்று 4-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான குளிர் காற்று வீசுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.42 அடியாக இருந்தது. அணைக்கு 1346 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 579 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீராக 753 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.05 அடியாக உள்ளது. அணைக்கு 605 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்1-நீர்மட்டம் 13.87 அடியாக உள்ளது. அணைக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரம் அரண்மனையில் பாஜக பொதுக்கூட்டம்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்து
மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி
போச்சம்பள்ளி அடுத்து உள்ள அரசம்பட்டி J.K 365 தென்னை
குட் சாமரிட்டன் மான்டிசோரி பள்ளி திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

“தமிழ்ப் புதல்வன்” திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்

August 13, 2024
70 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
கல்லூரியில் இணையவழி குற்ற விழிப்புணர்வு
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோவி செழியன், எம்பி எம்எல்ஏ விடுதலை: தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு
காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account