தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி முகாமை கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் கவிதா, செயற் பொறியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு நடத்தினார். அப்போது ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிர்ணைக்கப்பட்ட காலத்தில் தரமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



