காளையார்கோவில், ஆக. 23 –
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளுக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி முதல் நிலை சேர்மன் கோகிலா ராணி நாராயணன் மற்றும் சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் நாராயணன் அரசு முதன்மை மருத்துவர் பாபா தலைமையேற்று நடத்தினார்.
மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜா, காளையார் கோவில் கூட்டு விளையாட்டு மையங்களின் தலைவர் பகிர் முகைதீன் மற்றும் செயலர் ஆரோக்கிய மலர், மிதிவண்டி கழகத்தின் தலைவர் நாகராஜன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வேதமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் பள்ளியின் தாளாளர் சேகர் ஸ்டாலின் ரவீந்திரன் லெனின் ஜீவானந்தம், முதல்வர் வீரபாண்டி, பொருளாளர் முருகேசன் ஆகியோர் சிறப்பு செய்தனர்.
மேலும் இவ்விழாவில் பல்வேறு போட்டிகளுக்கு பரிசுகளை செயலர் தெய்வானை ஜீவானந்தம் மற்றும் செல்வி சிவாசினி செல்வன் அருண் ஆகியோர் வழங்கினர். மேலும் இவ்விழாவில் காளையார்கோவில் ஒன்றிய வட்டார யாதவ சங்கத் தலைவர் அங்குசாமி, சுக்கானூரணி தலைவர் அமுதா ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், மலேசிய தொழிலதிபர் பூமி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் தலைமையில் விழா குழுவினர் மாணவ மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



