களியக்காவிளை, மே 27 –
களியக்காவிளை அருகே செங்கல், மகேஸ்வரத்தில் சிவபார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம், தேவபோகம், வைகுண்டம், கணபதி மண்டபம், உள்ளிட்ட தேவ சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் சார்பில் கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வருடந்தேறும் நோட்டு புக், குடை, எழுது பொருட்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் புகழ்பெற்ற செங்கல் சிவபார்வதி கோயிலில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி நோட்டு புத்தகங்கள், பேனா, புத்தகப் பை, குடை உள்ளிட்டவற்றை வழங்கி ஆசி கூறினார். அப்போது அவர், நல்ல முறையில் கல்வி கற்குமாறு மாணவர்களை அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கோயில் மேல்சாந்தி குமார், வக்கீல் ஜெயசந்திரன் மற்றும் நிர்வாகிகள் பெற்றோர்கள், மாணவ மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



