கன்னியாகுமரி, டிச. 13 –
கன்னியாகுமரி அருகே பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் முரளி கிருஷ்ணன். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். முரளி கிருஷ்ணனின் மனைவி மகிளா (33). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மகிளா தற்போது வீட்டின் மேல் மாடியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவ தினம் முரளி கிருஷ்ணனின் தந்தை முருகேசன் (65), தாய் இரத்தினமணி (57), அண்ணன் பாலகிருஷ்ணன் (40) ஆகியோர் மகிளா தங்கி இருந்த மாடி வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த மகிளா குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசன், ரெத்தினமணி, பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


