சென்னை, ஜூலை 2 –
எச்.டி.எஃப்.சி லைஃப் நிறுவனத்தின் ‘ரெடி ஃபார் லைஃப் ரிப்போர்ட் 2025’ அறிக்கையானது பணிபுரியும் பெண்கள் குடும்ப வருமானத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை சுட்டிகாட்டுகிறது. இருப்பினும், நிதி சார் தயார்நிலை என்று வரும்போது அவர்கள் போதுமான அளவு தயாராக இல்லை என்ற உண்மையையும் இது வெளிப்படுத்துகிறது.
பெண்களின் நிதி சார் தீர்மானங்கள் பெரும்பாலும் சமூக பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டவை. 40 சதவீதம் பெண்கள் தங்கள் குழந்தையின் கல்வியையே முதன்மையான சேமிப்பு இலக்காக வைத்துள்ளனர். ஒரு குடும்பத்தின் நீண்டகால இலக்குகளை வடிவமைப்பதில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை இது உறுதிசெய்கிறது.
எச்.டி.எஃப்.சி லைஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் & தலைமை வணிக அலுவலர், வினீத் அரோரா கூறுகையில்: நிதி பாதுகாப்பு மற்றும் பணி ஓய்வுக்கு திட்டமிடல், விழிப்புணர்வு இருந்தபோதிலும், டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்க போதுமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. இதேபோல், பணி ஓய்வைத் திட்டமிடுவதைப் பொறுத்தவரை விழிப்புணர்வு இருந்தாலும் கூட, 43 சதவீதம் பேர் மட்டுமே நிதி ரீதியாக மற்றவர்களை சார்ந்திருக்காமல் ஒய்வுக்குப் பிறகு தங்கள் வாழ்க்கையை வாழத் தயாராக இருப்பதாக உணர்கிறார்கள்.
ஆயுள் காப்பீட்டு தீர்வுகள் வாழ்க்கையின் பல்வேறு சூழலில் எழும் தேவைகளை நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் விழிப்புணர்வு மற்றும் தகவலறிந்து தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான பணிபுரியும் பெண்கள் நிதி ரீதியாக தயாராக இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.


