தென்காசி, மார்ச் 23 –
தேர்தல் விதிகள் அமுலில் உள்ள நிலையில் நகராட்சி பொறியாளர் தனது குடியிருப்பில் வசிக்காத நிலையில் நகராட்சி ஆணையர் கஷ்டடியிலிருந்த பொறியாளர் குடியிருப்பு சாவி எப்படி திமுகவினருக்கு கைமாறிய விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் பார்வையாளர் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நாள் முதல் அரசின் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்பிற்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி முழுவதையும் கண்காணிக்கும் பொருட்டு ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமித்தது. அந்த வகையில் கடையநல்லூர் தொகுதி தேர்தல் பார்வையாளராக தீரஜ்குமார் ஐ ஏ எஸ் என்பவரை தேர்தல் ஆணையம் நியமித்தது.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவித்த மறுகணமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குறிப்பாக ஆளுகை கால வரம்பு இருக்கும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாக அலுவலகங்கள் அனைத்தும் தேர்தல் விதிகளை பின்பற்றி பூட்டி சீல் வைக்கப்பட்டன. இந்த நிலையில் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தங்கி நிர்வாகம் சம்மந்தமான பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஆணையர் மற்றும் பொறியாளர் ஆகியோருக்கு தனித்தனியே குடியிருப்புகளை நகராட்சி நிர்வாகம் கட்டி வைத்துள்ளது. ஆனால் இந்த குடியிருப்புகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பயன்படுத்தாததால் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாய் திமுகவினர் மேற்கண்ட நகராட்சி அதிகாரிகளின் குடியிருப்புகளை தேர்வு செய்து நித்தமும் தேர்தல் பணிகளோடு குறிப்பாக இரவு நேரங்களில் கூத்து கும்மாளங்களும் கேளிக்கைகளும் அரங்கேறி வந்தது.
இந்நிலையில் திமுகவினரின் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான இந்த அராஜக செயலை முளையிலே கிள்ளும் பொருட்டு தேசிய கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவர் தேர்தல் பார்வையாளரிடம் புகார் கொடுக்கவே சம்மந்தப்பட்ட பொறியாளர் தங்கும் விடுதி சீல் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தேர்தல் விதிகள் அமுலில் இருக்கும் போது நகராட்சி பொறியாளர் குடியிருக்காத அந்த வீட்டுசாவி எப்படி திமுகவினரின் கைக்கு கிடைத்தது என்பது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் சார்பில் கடையநல்லூர் நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக கூறப்படுகிறது.



