நாகர்கோவில், மார்ச் 16 –
கருங்கல் அருகே கப்பியறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண மணி (36). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கிருஷ்ண மணி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். அவ்வப்போது குடிபோதையில் தகராறு செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 12ம் தேதி காலை வீட்டு அருகே விழுந்து அடிபட்டு தலையில் பலத்த காயத்துடன் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றினார்கள். அங்கு எம் எம் வார்டில் சிகிச்சையில் இருந்த கிருஷ்ண மணி நேற்று திடீரென மாயமானார்.
மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் ரெஜினாள் (63) ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


