குளச்சல் மே 19
நெய்தல் மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் குறும்பனை பெர்லின், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அலுவலகத்தில் அவரை சந்தித்து
நீண்டகாலமாக நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் 17 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர கோரி ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனி மனுவாக அழித்தார்.
இதனைத் தொடர்ந்து தின தமிழ் நாளிதழுக்கு குறும்பனை பெர்லின் அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் கூறுகையில் :-
குமரி மாவட்ட மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகளை கடலோடிகளின் உற்ற நண்பனாக உடன் இருந்து செயல்படுத்தி நிறைவேற்றப்படாத கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருவது நெய்தல் மக்கள் இயக்கமாகும். கடந்த 15 ஆண்டுகளாக கடலோடி மக்களின் 17 வெவ்வேறு கோரிக்கைகளை கடலோடிகள் நலன் கருதி நிறைவேற்றித் தர அரசிடம் கேட்டும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்து தருகிறோம் எனக் கூறி காலம் தாழ்த்தி இறுதியாக அரசின் கொள்கை முடிவு என்று ஒற்றைவரியில் கூறி விடுகின்றனர். “ஆட்சிகள் பல மாறியும் கடலோடிகளின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் காட்சியாகவே உள்ளது”
15 ஆண்டு காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் கடலோடிகளின் கோரிக்கைகளை தமிழ்நாட்டில் நல்லாட்சி செய்து தமிழக மக்களுக்கு விடியலை ஏற்படுத்தி விடியல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் இருளடைந்து காணப்படும் கடலோடிகளின் நிறைவேற்றப்படாத 17 கோரிக்கைகளுக்கு விடியல் ஏற்படுத்தி தருவார் என்ற நம்பிக்கையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சரை சந்தித்து எங்களுடைய 17 கோரிக்கைகளை தனித்தனி மனுவாக அளித்து ஒவ்வொரு மனுவுக்கும் தனித்தனி விளக்கம் கொடுத்து எடுத்துரைத்துள்ளோம்.
அது என்னவென்றால்:-
லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் அரசு விழாவாக நடத்த வேண்டும், மேலும் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்,
கடல் ஆம்புலன்ஸ் திட்டம் நிறைவேற்ற வேண்டும்,
மீனவர் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும்,
குறும்பனை தனி ஊராட்சியாக அறிவித்திட வேண்டும்,
நவ:21,மீனவர்தினம் அரசு விடுமுறை வேண்டும்,
மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.21000 வழங்க வேண்டும்,
கடற்கரை கிராமங்களை தனித்தனி ஊராட்சியாக்க வேண்டும்,
கடலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்,
மீன்வள பல்கலை: மீனவர் பாரம்பரிய ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும்,
கடலோரங்களில் கதிர்வீச்சு: விவான ஆய்வு செய்ய வேண்டும்,
கடலோர பேரூராட்சி, நகராட்சி வார்டு வாக்காளர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்,
சர்ச் நிலங்களில் தடையின்றி பத்திரப்பதிவு செய்ய வேண்டும்,
மீனவர் மீனவ மகளிருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
குறும்பனை, இனையம் புத்தன்துறை, மணக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்,
கடலரிப்பு: தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்,
பேரிடர் முன்னெச்சரிக்கை: தொழிலுக்குப் போகமுடியாத காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும்,
விசைப்படகுகளுக்கு ரேடியோ டெலபோன் வழங்க வேண்டும் போன்றவையாகும். அதைப் பெற்றுக் கொண்ட அவரும் துறைவாரியாகப் பிரித்து மாதம் 2 கோரிக்கைகளுக்காவது தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தார். கடலுக்கு முகத்தையும் கரைக்கு முதுகையும் காட்டி நிற்கும் கடலோடிகளின் கோரிக்கைகள் கோட்டையில் எட்டியது மகிழ்வே.
15 ஆண்டுகளாக நெய்தல் மக்கள் இயக்கம் வைத்த கோரிக்கைகளுக்கு 2026 தேர்தலுக்கு முன் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என அவர் தெரிவித்தார்.



