ஆரல்வாய்மொழி, ஜன.05: தோவாளை ஊராட்சி சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 லட்சம் செலவில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா நடைபெற்றது
தோவாளை ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஊராட்சி பொதுநிதியில் ரூ 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு பள்ளியின் நுழைவு வாயில், பள்ளியில் பயில்கின்ற மாணவ மாணவிகள் ஆசிரியர்களுக்கு பயன்பெறும் விதத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, அலங்கார தரைகள்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் இப்பணிகள் முடிவுற்ற நிலையில் இதனை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் தலைமையேற்று முடிவுற்ற அனைத்து பணிகளையும் திறந்து வைத்தார். பின்னர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் தாணு, அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாந்தி, சந்திரா பானுமதி, வார்டு உறுப்பினர்கள் வித்யலட்சுமி, ராமலெட்சுமி, சிவகாமி, சந்தியாதேவி, ராமலட்சுமி, ஆறுமுகம்பிள்ளை, மணிகண்டன், இசக்கிமுத்து மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.



