மார்த்தாண்டம், டிச. 9 –
அருமனை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (35). ராணுவ வீரர். தற்போது விடுமுறையில் ஊரில் உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் திடீரென ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கும் சத்தம் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் எழுந்தனார்.
அப்போது 8 க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக்கை சேதப்படுத்தி, ஜன்னல் மற்றும் இரும்பு கதவை உடைத்து உள்ளே புக முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடியுள்ளனர். உடனடி அந்த கும்பல் இரண்டு கார்களில் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை பிடிக்க சிலர் முயன்ற போது அவர்களை தாக்கி காரால் மோதி ஓடையில் தள்ளி தப்பி சென்றுள்ளனர்.
ஜன்னல்கள் கண்ணாடிகளை உடைத்ததில் வீட்டில் இருந்த குழந்தைகள் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து ஷாஜி அருமனை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து சென்றனர்.


