தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் மொத்தம் 12 லட்சத்து 77 ஆயிரத்து 917 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.01.2025ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு முறையிலான சுருக்கு முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இறுதி வரைவு வாக்காளர் பட்டியல்வெளியிடப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் 1489 வாக்குச்சாவடிகள் உள்ளன. 2026 ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இந்த வாக்குச் சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர குடோனில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் குடோனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் இந்த மின்னணு வாக்குப்பதி இயந்திரங்களை வைக்கப்பட்டுள்ள அறைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .பின்னர் பாதுகாப்பு குறித்து கேட்ட றிந்து, தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.



