தருமபுரியில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா தருமபுரி எஸ் வி ரோட்டில் நடந்தது. பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் வரதராஜன், பூபதி, மாவட்ட நிர்வாகிகள் மதியழகன், சங்கீதா, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திட்ட மேலாண்மை மாநில தலைவர் மகேஷ் குமார் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கடைகள் மற்றும் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து துண்டு பிரச்சாரங்களை கொடுத்து தேசிய கல்விக் கொள்கைக்காக ஆதரவாக கையெழுத்து வாங்கினார்கள்.



