நிலக்கோட்டை, செப். 19 –
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் உடனடியாக தீர்வு காணப்பட்ட 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் சான்றிதழ் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் தமிழக அரசு உத்தரவுப்படி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சித் தலைவர் எஸ்பி. செல்வராஜ் தலைமை வகித்தார். வட்டாட்சியர் விஜயலெட்சுமி, திமுக பேரூர் செயலாளர் ராஜாங்கம்,துணைத்தலைவர் விமல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் பூங்கொடிமுருகு வரவேற்றார்.
முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் மனு அளித்தனர். இதில் 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தமிழக அரசின் வழிகாட்டுதல்படி பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், உடனடி தற்காலிக மின் இணைப்பு, இருப்பிட சான்றிதழ், பெயர் மாற்றம், வருமான சான்றிதழ், புதிய ரேசன் கார்டு என உடனடியாக தீர்வு காணப்பட்ட 30 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் சான்றிதழ்கள் வழங்கினார்.
மேலும் இந்த முகாமில் கவுன்சிலர்கள் முகமது நசீர், கருணாகரன், காசியம்மாள், கவிதா, செல்வி, சத்தியா திமுக நிர்வாகிகள் திருமுருகன், மலையாளம், கந்தபிரபு மற்றும் பேரூராட்சி முதல் நிலை எழுத்தர் விவேக், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் அசோக்குமார் மற்றும் அலுவலக பணியாளர்கள், வருவாய் துறையினர் உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



