திருவெண்ணெய்நல்லூர், அக். 10 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லூர் அருகே உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்தலவாடி, கருவேப்பிலைபாளையம், ஆணைவாரி ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மடப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு பி.டி.ஒ., பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் மா. சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., ஏ.ஜெ.மணிக்கண்ணன் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மேலும் முகாமில் பயனாளிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் மருந்து பெட்டகம், தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய விதை தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் வீராசாமி, சுப்பிரமணியன், ஸ்ரீதர், மைக்கேல், ராஜா உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



