திருவெண்ணெய்நல்லூர், ஆக. 22 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலையில் உள்ள சர்க்கரை ஆலை திருமண மண்டபத்தில் பெரியசெவலை, சரவணம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பி.டி.ஒ. பாலசுப்பரமணியன் தலைமை தாங்கினார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கண்காணிப்பாளர் துணை ஆட்சியர் சுந்தர்ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சிவராஜ், வீரப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி சக்திவேல், துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கவுன்சிலர் மா. சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தராஜன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பிரேம்குமார், கொத்தனூர் திருமால், ராஜேந்திரன் விவேகானந்தன், துலங்கம்பட்டு முருகன், கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



