திருவெண்ணெய்நல்லூர், ஆக. 13 –
திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1300 மாணவ, மாணவிகளுக்கு பட்டயங்களை முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் இந்திரா (பொறுப்பு) தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்த்தனம் முன்னிலை வகித்தார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1300 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பட்டயங்களை வழங்கினார். இதில் மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், நகர செயலாளர் பூக்கடை கணேசன், ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.



