கிருஷ்ணகிரி :05-10-2024கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக, புதிய மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் .ஒய்.பிரகாஷ் (ஓசூர்), த.டி.ராமசந்திரன் (தளி), ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். உடன் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் .மணிமேகலை நாகராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் .பத்மலதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.



