நாகர்கோவில் ஆக 18
கன்னியாகுமரி
பா.ஜ.,ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் சுபாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நிகழ்ந்த கொடூரங்கள் குறித்து சில நாட்களுக்கு பேசி விட்டு, வேறு பெரிய பிரச்சினை வெடித்ததும் பொதுமக்கள் மறந்து விடக் கூடாது.
பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
மருத்துவர்களை அச்சுறுத்தும் கும்பலையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலத்தில்,உயிரை காக்கும் மருத்துவர்கள் உயிருக்கே பாதுகாப்பு இல்லாதது வேதனை அளிக்கிறது.
பெண்களுக்கு அனைத்து விதமான உரிமைகளை பெற்று தந்தோம்,பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினோம் , பெண்களுக்கு பாதுகாப்பான அரசு திமுக என மேடைக்கு மேடை பேசி வரும் திமுக எம்.பி.,கனிமொழியும்,திமுக தலைவர்களும் இதுவரை பெண் மருத்துவர் கொலை விவகாரம் குறித்து வாய்திறக்காது ஏன்…
கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலத்தில் அசம்பாவிதங்கள் நடந்தால் மவுனம் காப்பது கண்டத்துக்குறியது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



