திருப்பத்தூர்:பிப்:14, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கொடி ஏற்றுதல் விழா கொண்டாடப்பட்டது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வெள்ளி விழாவினை கொண்டாடி வரும் நிலையில் கேப்டன் விஜயகாந்த் புகழினை பரப்பும் வகையிலும், கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா அவர்களின் வழிகாட்டலில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் திருப்பத்தூர் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் கொடி ஏற்றுதல் நிகழ்வினை சிறப்பாக கொண்டாடினர்.
இந்த கொடி ஏற்ற நிகழ்ச்சியானது திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய அவைத் தலைவர் குமார் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளர் எம் கே ஹரிகிருஷ்ணன் கலந்துகொண்டு கொடி ஏற்றி இனிப்பு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் ஆஞ்சி,மாவட்ட கழக துணை செயலாளர்கள் C.S.சரவணன்,பயாஸ் பாஷா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் குணபாலன், மாவட்ட ஐடி விங் செயலாளர் சுகு, தலைமை கழக பேச்சாளர் அலிஜான் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொனேரிகுப்பம், பசிலிகுட்டை, ராச்சமங்கலம் அருகே உள்ள விநாயகபுரம், மாடப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் ஜெயகாந்தன், பாண்டியன்,தமிழ்வாணன்,ராஜேஷ் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



