கன்னியாகுமரி, ஜூலை 22 –
வி த லீடர்ஸ் அமைப்பு சார்பில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 2ம் தேதி கன்னியாகுமரி கடற்கரையில் தூய்மை பணியை அண்ணாமலை துவக்கி வைக்கிறார்.
வி த லீடர்ஸ் அமைப்பு சார்பில் தமிழகத்தில் அடுத்த மாதம் 2 ம்தேதி தூய்மை பணி நடக்கிறது. கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடக்கும் தூய்மை பணியை வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை துவக்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து நெல்லை மாவட்டம் உவரி, மணப்பாடு, திருச்செந்தூர் பகுதிகளிலும் நடக்கும் இந்த தூய்மை பணி தூத்துக்குடியில் நிறைவடைகிறது.
இது குறித்து வி த லீடர்ஸ் அமைப்பின் நிர்வாகி சி.எஸ்.சுபாஷ் கூறியதாவது: கன்னியாகுமரி கடற்கரையில் தூய்மை பணி மற்றும் மரகன்று நட்டு பராமரித்தல் பணியினை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 2 ம் தேதி காலை 8.30 மணிக்கு வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை துவக்கி வைக்கிறார். இந்த பணியில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



