தருமபுரி, ஜூலை 13 –
தருமபுரியில் சட்ட தூண்கள் இயக்கத்தின் சார்பில் அனைத்து வகை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் சட்ட தூண்கள் இயக்கத்தின் நிறுவனர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் மணி, அறங்காவலர் முத்து மற்றும் குமரவேல், மாநில துணைச் செயலாளர் எஸ்.பி.நாகராஜ், மாநில இளைஞரணி செயலாளர் கணேஷ், மாநில தொழில் நுட்ப செயலாளர் கௌதம், மாவட்ட தலைவர் பி.கே.சிவா, மாவட்ட செயலாளர் முனிராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நிலவும் அடிப்படை பிரச்சனைகள், மக்களின் அன்றாட தேவைகள், கிராமப்புற வளர்ச்சி, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பொதுநல திட்டங்களை திறன்பட செயல்படுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் கிராம மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு அறிந்து அவற்றை சம்பந்தப்பட்ட அரசு துறைகளில் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதோடு மக்கள் நலன் சார்ந்த பணிகளில் சட்ட துண்கள் இயக்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது.



