திருப்பூர், ஜூன் 13 –
திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள டாடா தனிஷ்க் ஷோரூம், 5 ஆயிரம் சதுர அடி பரப்பில் நவீன டிசைன் நகைகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது. புதிய ஷோரூமை டைட்டன் நகைப்பிரிவு பிராந்திய மேலாளர் சுபிஷ் சுதாகரன், பிசினஸ் மேலாளர் சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர். ஷோரூம் நிர்வாக இயக்குனர் செல்வக்குமார் வரவேற்றார். அவரது குடும்பத்தினர் பிரமீளா, பூவாத்தாள் மற்றும் வாடிக்கையாளர்கள் குத்துவிளக்கேற்றினர்.
நிர்வாக இயக்குனர் செல்வக்குமார் கூறுகையில், நாளை (14ம் தேதி) வரை வைரத்தின் மதிப்பு மற்றும் தங்க நகையின் செய்கூலியில் 20 சதவீதம் தள்ளுபடியும், தங்கத்திற்கு கிராமுக்கு 101 ரூபாய் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படும். பழைய நகைகளை மாற்றும் வசதியும், சேமிப்பு திட்டமும் உள்ளது என்றார். அதிகாரிகள் சுபிஷ் சுதாகரன், சந்திரசேகரன் ஆகியோர் கூறுகையில், பாரம்பரியம் மற்றும் நவீன டிசைன்கள் மூலம் வாடிக்கையாளர்களுடனான உறவை வலுவாக்கவே இந்த உலகத்தளவிலான மறு துவக்கம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.



