திருச்சி, ஏப். 29 –
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரத்தைச் சேர்ந்த 59 வயதான முருகேசன், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மோதி உயிரிழந்தார். சுப்பிரமணியபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பலத்த காயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.


