திருப்பூர், ஜூலை 11 –
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 1 வார்டு எண் 10ல் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2024_25ன் கீழ் 15 லட்சம் மதிப்பீட்டில் ஓம் விநாயக கார்டன் பகுதியில் புதிய நியாய விலை கட்டடம் கட்டும் பணி துவக்க விழா மற்றும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் 25 லட்சம் மதிப்பீட்டில் திருவள்ளுவர் நகர் பகுதியில் பொதுக் கழிப்பிடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவினை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். உடன் துணை மேயர் பாலசுப்ரமணியம், திமுக மாநகரச் செயலாளர் தங்கராஜ், 1-வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, 15 வேலம் பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் மணி, 10 வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு, 10 வது வார்டு செயலாளர் சசி மற்றும் பலர் பங்கேற்றனர்.



