திருப்பூர், மே 27 –
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. புதிய அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ். பாலமுருகன் திறந்து வைத்தார். விழா இன்று காலை 6 மணியளவில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை 10 மணியளவில் புதிய அலுவலகத்தை எஸ்.பாலமுருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “திருப்பூரில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவேன். நொய்யல் ஆற்றின் குறுக்கே யூனியன் ரோடு ஈஸ்வரன் கோவில் சந்திப்பு பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம்அறிவுறுத்தியுள்ளேன்.
மேலும் பழைய பேருந்து நிலையம், அம்மா உணவகம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதிகளில் நிலவும் சுகாதார மற்றும் தூய்மை பிரச்சினைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். நேரில் குறைகளை தெரிவிக்கலாம்.
திருப்பூர் மாநகரில் ஓராண்டுக்கும் மேலாக நிலவி வரும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மாநகராட்சியில் பதிவு பெற்ற நடைபாதை கடை வியாபாரிகளுக்கு மேற்கூரை நடவடிக்கை மார்க்கெட்டில் அமைத்து வழங்க எடுக்கப்படும். பூ தினசரி வாடகை தொடர்பான பிரச்சினைகள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். அரசுப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதற்காக பணம் வசூலிப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். மேலும் எனது உதவியாளரிடமும் மனுக்கள் அளிக்கலாம்” என்றார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் பாண்டியன், பாபு, குத்புதீன், மோகன், அமர்நாத், ஜே.கே. சாமி, செல்லப்பாண்டி, போஸ், ரஞ்சித், கெளதம், சந்துரு, யுவராஜ், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



