திருப்பத்தூர், ஏப். 29 –
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ல் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தபோது, கல்லூரியில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பார்வையிட வேட்பாளர்களின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள முகவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
உடன் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் விஜயகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெய்சங்கர், வாக்கு எண்ணும் மையத்தின் கண்காணிப்பாளர் / மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தணிகாசலம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அண்ணாதுரை, தேர்தல் வட்டாட்சியர் திருமலை, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



