குளச்சல், ஜூன் 9 –
குளச்சல் காவல் நிலைய போலீசார், நகராட்சி அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து இன்று குளச்சல் பேருந்து நிலையம், பள்ளிக்கூடம், கல்லூரி போன்றவற்றின் அருகில் உள்ள கடைகளில் புகையிலை, போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என சோதனை மேற்கொண்டனர். மேலும் பள்ளிகூடங்கள் அருகிலும் 100 மீட்டர் தொலைதூரத்திற்கு புகையிலை, போதைப் பொருட்கள் மற்றும் சிசர்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் கடைகளுக்கு அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடலோர பகுதிகளான சைமன் காலனி, கோடிமுனை வாணியக்குடி, குறும்பனை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சோதனையின் போது இரண்டு கடைகளில் புகையிலை கண்டெடுக்கப்பட்டு உணவுத்துறை அதிகாரிகளால் இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சோதனையில் குளச்சல் நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணன், காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர், மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர்.



