சுசீந்திரம், ஏப். 25 –
நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளை அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடை விழா நாளை மறுநாள் 27ம் தேதி திங்கள் கிழமை தொடங்கி 29ம் தேதி புதன்கிழமை வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
கொடை விழாவின் முதல் நாளான நாளை மறுநாள் 27-தேதி திங்கள்கிழமை காலை 7 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகமும், 10 மணிக்கு தேவார பஜனையும், 11 மணிக்கு 10 மற்றும் 12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊர் தலைவர் டி. சுந்தரேசன் பரிசுகள் வழங்குகிறார். பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு மாபெரும் அன்னதானமும், மாலை 6 மணிக்கு கீழவண்ணான்விளை ஸ்ரீ முத்தாரம்மன் மகளிர் மன்றத்தாரின் திருவிளக்கு பூஜை வழிபாடும், இரவு 8 மணிக்கு நையாண்டி மேளமும், 9.30 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 2 மணிக்கு சாஸ்தா மற்றும் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.
கொடை விழாவின் 2ம் நாளான 28ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நையாண்டி மேளமும், 9.30 மணிக்கு வில்லிசையும், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 12.30 மணிக்கு மாபெரும் அன்னதானமும், 1 மணிக்கு வில்லிசையும், 2 மணிக்கு முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜையும், அம்மன் பவனி வருதலும், செண்டை மேளத்தோடு பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு கீழவண்ணான்விளை ஸ்ரீ முத்தாரம்மன் பஜனை குழுவினரின் பஜனையும், இரவு 8 மணிக்கு வில்லிசையும், 12 மணிக்கு பத்திரகாளியம்மனுக்கும், வேதாளை அம்மனுக்கும், சிறப்பு பூஜை மற்றும் மாவிளக்கு ஏந்துதல், குத்தியாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
கொடை விழாவின் 3ம் நாளான 29ம் தேதி புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு வாணவேடிக்கையும், 4.30 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும், காலை 7 மணிக்கு வில்லிசையும், 9 மணிக்கு காலசுவாமி, சுடலைமாடசுவாமிக்கு சிறப்பு பூஜையும் மற்றும் மஞ்சள் நீர் அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து காலை சிற்றுண்டியும் நடைபெறுகிறது.
கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் டி. சுந்தரேசன், துணைத் தலைவர் எ. இராஜாமணி, செயலாளர் பி. சிவகுமார், பொருளாளர் ஆர். கண்ணன், இணைச் செயலாளர் சி. இராஜேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.



