கோவை, ஏப். 2 –
நடைபெற உள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் கே.நித்தியானந்தன் கூட்டணி கட்சி நிர்வாகிகளான மருத்துவர் மகேந்திரன், காங்கிரஸ் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், விசிக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மதிமுக நகர செயலாளர் குகன் மில் செந்தில் ஆகியோர் கூட்டாக இணைந்து பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் வேட்பு மனுவினை வழங்கினர்.
முன்னதாக கோவை சாலையில் அமைந்துள்ள திமுக கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் இருந்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த வேட்பாளர்: பொள்ளாச்சி தொகுதிக்கு நீண்ட நாள் கோரிக்கையான பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்குவோம், பெண்கள் கல்வியில் முன்னேற வழிவகை ஏற்படுத்துவோம், தென்னை விவசாயிகளுக்கு உறுதுணையாய் நிற்போம், வாகனங்கள் நெரிசல் இல்லாத பொள்ளாச்சி நகரை உருவாக்குவோம், சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவோம்.
கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி இருந்தார். அடுத்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர்ந்து நடைபெறும் பொள்ளாச்சிக்கு அனைத்து விதமாகவும் உறுதுணையாய் நிற்பேன் எனவும் வேட்பாளர் உறுதியளித்தார்.



