சென்னை, ஜூன் 19 –
சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் கடந்த 30 ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை செய்து வரும் நாராயணா மருத்துவமனையின் “டயாலிசிஸ்” மற்றும் “டே கேர் கீமோ போர்ட் தெரபி” மையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மற்றும் செய்தி துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நாராயண மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் சீனிவாசன், மருத்துவர் வரலட்சுமி சீனிவாசன், மருத்துவர் அமரேஷ் நாராயண், மோனிகா அமரேஷ்,
அபிஷேக் நாராயண் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



