திருச்சி, ஜுன் 11 –
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வளியாம்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.300 ஊதியம் ரூ.230 ஆக குறைக்கப்பட்டதை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



