தக்கலை, டிச. 9 –
தக்கலை அருகே உள்ள மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர் இம்மானுவேல் மனைவி தங்க ரத்தினம் (65). குடும்ப பிரச்சினை காரணமாக தங்கரத்தினம் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்தார். ராமன்பரம்பு பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். கட்டிட வேலைக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் தங்க ரத்தினம் உயிரிழந்தது தெரிய வந்தது.
தென்னை மரத்துக்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்க ரத்தினத்துடன் விஜயன் என்பவரும் தங்கி இருந்தார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


